Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – பாடசாலைகளில் விசேட பொலிஸ்...

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு – பாடசாலைகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடையும் நிலையில் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடைகிறது.

கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments