Thursday, March 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவை எச்சரிக்கும் கொலம்பியா ஜனாதிபதி!

அமெரிக்காவை எச்சரிக்கும் கொலம்பியா ஜனாதிபதி!

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஒரு “கொடுங்கோன்மைச் செயல்” என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில் கொலம்பியர்கள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டால் அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்

இந்த மாதம் தொடங்கியதிலிருந்து 17 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை, அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்தியுள்ளார்.

இருப்பினும், சட்ட வல்லுநர்களும் சட்டமியற்றுபவர்களும், அவை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுகின்றனவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முதன்மையாக கொலம்பியாவின் அண்டை நாடான வெனிசுலாவை மையமாகக் கொண்டிருந்ததாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இலக்குகள் மற்றும் கொல்லப்பட்ட நபர்கள் குறித்து அமெரிக்கா மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளது.

மேலும், தாக்கப்பட்ட முதல் படகில் ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்தவர்கள் இருந்ததாக வெளியான தகவல்கள் சர்ச்சையில் உள்ளன.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments