Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில், ஈரான் ஆதரவு பேச்சாளர்கள், சமூக வலைதளத்தில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மற்றும் போராட்டங்களை நடத்த முயற்சிப்பவர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறை தூண்டுதல் போன்றவற்றை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு (ஊரடங்கு உத்தரவு) பிறப்பிக்கலாம் எனவும் இந்தியாவில் மத ரீதியிலான பதற்றம், வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments