குற்றப்பின்னணி கொண்ட கனேடியர் ஒருவர் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 6ஆம் திகதி, 28 வயதுடைய கனேடியர் ஒருவர், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள விண்ட்சரையும், அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள டெட்ராயிட்டையும் இணைக்கும் கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
எப்படியோ கனடா அதிகாரிகளைத் தாண்டிச் சென்றுவிட்ட அவர், அமெரிக்க பகுதிக்குள் நுழைய முயலும்போது அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
விசாரணையின்போது, அவர் ஏற்கனவே குற்றப்பின்னணி என தெரியவந்த நிலையில், அவரை கனடா அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்க அதிகாரிகள், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார்கள்.


