Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து - பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று  இரவு பயணிகளுடன் பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.

பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

Update –

சாரதியின் நித்திரை கலக்கத்தினால் குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும்

-குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments