Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கந்தளாய் வைத்தியசாலைக்கு முன் பாரிய மரம் முறிவு!

கந்தளாய் வைத்தியசாலைக்கு முன் பாரிய மரம் முறிவு!

திருகோணமலை – கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (11) காலை திடீரென முறிந்து வீழ்ந்த ஒரு பாரிய மரம் காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் பல கடுமையாக சேதமடைந்துள்ளன.

வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளே இவ்வாறு மரத்தின் கீழ் சிக்கி நசுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எவருக்கும் பாரிய காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments