Saturday, September 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று (18) காலை சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments