Wednesday, August 26, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி அபராதம்!

பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி அபராதம்!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத் ஜெயசூரிய, பெவிலியன் திரும்பும் வழியில் தனது மட்டையால் எல்லைக்கோடு தடுப்புகளைத் தாக்கியுள்ளார்.

கிரிக்கெட் உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக ஐசிசியின் ‘பிரிவு 1’ விதிமீறலின் கீழ் அவருக்கு ஒரு ‘டிமெரிட்’ புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

தனது தவற்றை ஜெயசூரிய ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தின் போது களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25% அபராதமும், தலா ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு டெஸ்டில் தண்டனை பெற்ற 3வது வீரராக பிரபாத் ஜெயசூரிய மாறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments