பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவல்களின்படி, குறித்த சிறுமி 11 வயதாக இருந்தபோது, சமூக வலைத்தளமான முகப்புத்தகம் (Facebook) மூலம் 22 வயதுடைய நபருடன் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த அறிமுகம் திருமணமாக மாறியதாகவும், திருமணமான ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குழந்தை பிறந்த சில காலத்திலேயே, சிறுமியை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
அப்போது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தனது குழந்தையை மீண்டும் பெறும் நோக்கில் சிறுமி சட்டரீதியான உதவியை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 7 மாத குழந்தை மீண்டும் தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம், குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.


