ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று வரை மொத்தம் 84,091 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28,717 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக ஆக அதிகரித்துள்ளது.



