நோர்வே செஸ் சாம்பியன் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற நோர்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை, தமிழக முதலமைச்சர் இன்று சந்தித்தார்.
இதன்போது ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பிரக்ஞானந்தாவுக்கு வழங்கினார்.
தலைமை செயலகத்தில் வைத்து கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் செஸ் விளையாடியுள்ளார்.



