Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டைக்காட்டில் நள்ளிரவு நான்கு வீடுகள் மீது தாக்குதல்!

கட்டைக்காட்டில் நள்ளிரவு நான்கு வீடுகள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்று முன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments