ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கனவே கொண்டுபவரப்பட்ட தீர்மானம் மிக மிக பலவீனமானது. அதனை மேலும் பலவீனமாக்கும் அறிக்கையே உறுப்பு நாடுகளெல்லாம் கொண்டுவரப்படவிருப்பதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.ஆ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் இடம் பெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிதாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு உறுப்பு நாடுகளிடமும் சென்று அதனை கைவிடுமாறு கேட்டு வருகறது. ஆனால் எமது அரசியல்வாதிகள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொளதவதில்லை என்றும் தெரிவித்ததுடன் இதனை ஒருமித்த குரலில் ஐக்கிய நாடுகள் சபை வரை எமது அரசியல் வாதிகள் கொண்டுசெல்வதன் மூலமே எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிருபர் மறியசீலன் திலைக்சன்


