Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதல்; 101 பேர் காணாமல் போனதாக தகவல்

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதல்; 101 பேர் காணாமல் போனதாக தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, இலங்கை கடற்படை மீட்புப் பணியை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அருகில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குறைந்தது 30 பேரை இலங்கை இராணுவம் மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, குறித்த கப்பல் தனது துயர சமிக்ஞையை காலி நகருக்கு அருகிலுள்ள தெற்கு கடற்கரையிலிருந்து அனுப்பியதாக தெரிவிக்கபடுகின்றது

பின்னர் காயமடைந்தவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கப்பல் தாக்குதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments