Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (18) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில். குறித்த இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதிகள் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சிறிய அளவிலான காலதாமதங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும், வீதி சமிக்ஞைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments