Monday, September 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மகனை பார்வையிட ஷிராந்தி வெலிக்கடைக்கு

மகனை பார்வையிட ஷிராந்தி வெலிக்கடைக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார்.

அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments