Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொதுமக்கள் தினம்: பிரதேச செயலாளர்கள் முக்கிய முடிவு

பொதுமக்கள் தினம்: பிரதேச செயலாளர்கள் முக்கிய முடிவு

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மூலம் நேரடி அல்லது இணைய வழியாகக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், பிரதேச செயலகங்களின் அன்றாடப் பணிகளுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளில் தங்களைச் சந்திக்க வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு நாளை முதல் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments