Monday, August 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா டிம்மின்ஸ் நகரில் 24 மணி நேர இடைவெளியில் இரு கொலைகள் !

கனடா டிம்மின்ஸ் நகரில் 24 மணி நேர இடைவெளியில் இரு கொலைகள் !

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களே காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 31-ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில், ‘பால்சம் வீதி வடக்கு’ பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

இக்கொலை தெரிந்த நபர் ஒருவராலேயே செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதேவேளை, ஆகஸ்ட் 01 நள்ளிரவுக்குப் பிறகு, ‘ரியா வீதி தெற்கு’ மற்றும் ‘பெலஞ்சர் அவென்யூ’ பகுதிக்கு அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் துப்பாக்கிக் சூட்டுக் காயங்களுடன் மூன்று ஆண்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், மற்றொருவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இரு கொடூர சம்பவங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்றும், வெவ்வேறு நபர்கள் மற்றும் சூழ்நிலைகளில் இச்சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், முதற்கட்ட விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மேலதிக விவரங்கள் அல்லது சந்தேகநபர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments